திருச்சிராப்பள்ளி, அக்.24- தி ரேடியோலாஜிக்கல் அசிஸ்டென்ஸ் அசோசியேசன் சார்பாக புதனன்று டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தை, தமிழ்நாடு அரசு காவல் துறையை வைத்து அடக்குமுறைக்கு உள்ளாக்கி போரட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததையும், போராட்டத்தில் வாழ்த்துரை வழங்கச் சென்ற மாநிலத் தலைவர் (பொ) டேனியல் ஜெயசிங்கை காவல்துறை கைது செய்த அராஜக நடவடிக்கையை கண்டித்தும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் நவநீதன், துணைத் தலைவர் ஜீவானந்தம், திருச்சிராப்பள்ளி-2 வட்டக்கிளை தலைவர் சவரிராஜன், வட்டக்கிளை துணைத் தலைவர் சிவாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் வட்டக்கிளை இணைச் செயலாளர் தேவா நன்றி கூறினார்.