districts

img

கொல்கத்தா மருத்துவ மாணவி வன்கொலை: அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப்.3 - மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவில் கே.ஜி.ஆர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் கும்பல்  பாலியல் வன்கொடுமைக்கு உட்ப டுத்தப்பட்டு, படுகொலை செய்யப் பட்டார். இதை கண்டித்தும், மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் திருவாரூர் மாவட்டம் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.செங்குட்டு வன் தலைமை வகித்தார். மாநில  துணை பொதுச் செயலாளர்  வே. சோமசுந்தரம், முன்னாள் மாநிலச் செயலாளர், எம்.சௌந்தரராஜன் மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  அரியலூர் அரியலூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி  நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் எம்.கே.ஷேக் தாவூத் கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். துணைத் தலைவர் பாக்கியம் விக்டோரியா கண்டன உரையாற்றினார்.  கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழ கன் தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பொன்.ஜெயராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தின் முன்பு  நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட் டத்தில், மாவட்டத் தலைவர் சு.வளர் மாலா தலைமை வகித்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மே ளனத்தின் தேசிய செயற்குழு உறுப்பி னர் அ.தி.அன்பழகன் விளக்கவுரை யாற்றினார். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார் நிறைவுரையாற்றினார்.