தஞ்சாவூர், ஏப்.27-
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய் யப்பட்டதை கண்டித்து தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கிராம அலுவலர்களின் கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் தியாக ராஜன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் சிங்.ரவிச்சந்தி ரன், செயலாளர் மாரிமுத்து, பொரு ளாளர் ரமேஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன், தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கார்த்திக், மாவட்டத் தலைவர் சந்திரபோஸ், தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, திருவையாறு வட்டாட்சியர் பழனியப்பன் ஆகி யோர் பேசினர்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி வட்டத் தலைவர் விசுபாலன் தலைமை வகித்தார். வட்டச் செய லாளர் கோகிலன், வட்டப் பொரு ளாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரா ன்சிஸ் படுகொலை செய்யப்பட் டதை கண்டித்தும், இதில் சம் பந்தப்பட்ட கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனே இயற்ற வேண் டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு ஊழி யர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.