districts

img

பட்டியலின இளைஞர் படுகொலை: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.21 - பட்டியலின இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்களன்று திருச்சி மாவட்டம் காட்டூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கனல்கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம், விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் கார்த்திகேயன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் மணிமாறன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் மோகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ரேணுகா, சிபிஎம் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் ஆகியோர் பேசினர். விவசாய சங்க பகுதி செயலாளர் செந்தில் நன்றி கூறினார். பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூரில் பட்டியலின இளைஞர் முத்துகுமார் கழுத்த றுத்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்ப வத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது  செய்வதோடு, இந்த குற்றத்திற்கு உடந்தையாக  இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை  தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடு வழங்க  வேண்டும். குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதை தடுக்கும் வகை யில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.