திருப்பூர் ஜூன் 19 - நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்த மணமக்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கூலி படையினர் மற்றும் சாதி வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட் டது. இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் திருப்பூர் தெற்கு மாநகரக் கமிட்டி சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டது. கருவம்பாளையத்தில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாநகர குழு உறுப்பினர் பி. பாலன் தலைமை ஏற்றார். தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெ யபால், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சுந்த ரம், தெற்கு மாநகர குழு உறுப்பினர் எஸ். பானுமதி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.செல்லதுரை, மாநகர குழு உறுப்பினர்கள் பா.ஞானசேகர், சஞ்சீவன், த. ஆறுகுட்டி, கே.பொம்முதுரை, செந்தில்கு மார் மற்றும் கிளை செயலாளர்கள், கட்சி ஊழி யர்கள் திரளானோர் பங்கேற்றனர். ஊத்துக்குளி அதேபோல் செவ்வாயன்று ஊத்துக்குளி டவுனில் தாலுக்கா குழு உறுப்பினர் வி.மணி யன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வாலிபர் சங்க தாலுக்கா செயலாளர் கு.பாலமுரளி ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். தாலுகா கமிட்டி உறுப் பினர் பிரகாஷ் கண்டன உரை ஆற்றினார். கட் சியின் ஊத்துக்குளி தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொழந்தசாமி, கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு உறுப்பினர் கு.சரஸ்வதி மற்றும் குன்னத்தூர் கிளை செயலாளர் பி.சின்னசாமி ஆகியோர் உரையாற்றினர். வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், அவர்க ளுக்கு உடந்தையாக செயல்பட்ட காவல் துறையைச் சேர்ந்தோர் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள், மாதர் சங்க நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத் துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடி வேல் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.எம்.வீர ப்பன், பன்னீர்செல்வம், ராஜரத்தினம், சிறுபான்மை நலக்குழு தலைவர் ஜான் கண்ணன், ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் கருணாநிதி உட்பட திரளானோர் கலந்து கொண்டு சாதி வெறிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.