திருச்சிராப்பள்ளி, நவ.29 - பாதாளச் சாக்கடை திட்டத்தை உடனே முடிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி 39 ஆவது வார்டு காந்தி நகருக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிய குடிநீர் இணைப்பு கொடுத்தும், இதுவரை தண்ணீர் வழங்காததையும், தண்ணீர் வராத குழாயின் ரெகுலர் பணியை மராமத்துப் பணி யாக மாற்றி மக்களிடம் வசூல் செய்வதை யும், காந்தி நகர் 7 மற்றும் 8 ஆவது தெரு பகுதிகளில் 4 அங்குல உயரம் சிமெண்ட் சாலையை 2 அங்குலம் மட்டுமே போட்ட தையும் கண்டித்தும், 2 அங்குல உயர சிமெண்ட் சாலையை 4 அங்குலமாக உயர்த்த வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள அனைத்து குறுக்கு சாலைகளையும் செப்ப னிட்டு தார்ச்சாலை அமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டத்தை உடனே முடிக்க வேண்டும். கழிவு நீர் வாய்க்காலை சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் கிளைகள் சார்பில் வெள்ளிக்கிழமை பானை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. காட்டூர் காந்தி நகர் நுழைவாயிலில் நடந்த போராட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பி னர் நல்லையா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், மூத்த தோழர் மரிய ராஜ் செந்தில்குமார், குமார் ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர் ஜான் பீட்டர் நன்றி கூறினார். போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.