கும்பகோணம், ஜூன் 16-
கும்பகோணத்தில் மைதீன் புகையிலை நிறுவனம் நீண்ட நாளாக செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் மெல்லும் புகையிலையை அரசு தடை விதித்ததால் இந்நிறுவனம் மூடப் பட்டது. இதனால், நிறுவனத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு, உணவுக்கு வழியின்றி குடும்பத்தோடு கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நிறுவனத்திடம், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவார ணம் வழங்க கோரியும், மெல்லும் புகையி லைக்கான தடையை நீக்கக் கோரியும் அல்லது தமிழக அரசு வேலை இழந்த புகை யிலை நிறுவன தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிடவும் வலியுறுத்தி கும்பகோ ணம் மெல்லும் புகையிலை சிஐடியு தொழி லாளர்கள் சார்பில் காந்தி பார்க் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மைதீன் புகையிலை தொழிலாளர் சங்க செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு தஞ்சை மாவட்ட தலைவர் எம்.கண்ணன் சிறப்புரை ஆற்றினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பழ.அன்புமணி, ஓய்வூதியர் சங்க வட்ட செயலாளர் பக்கிரி சாமி ஆகியோர் ஆதரித்து பேசினர்.
சிஐடியு மைதீன் தொழிலாளர் சங்க தலை வர் கார்த்திகேயன் செந்தில், இளங்கோ, துரை வைரமுத்து, உள்ளிட்ட மைதீன் தொழி லாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.