திருச்சிராப்பள்ளி, அக்.7 - சுத்தமான, சுகாதாரமான குடிநீரை தங்கு தடையின்றி தினந்தோறும் வழங்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீர மைக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி மராமத்து செய்ய வேண்டும். ரேசன் கடை களில் அனைத்துப் பொருட்களையும் விநி யோகம் செய்ய வேண்டும். தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் முழுமை யாக நூறு நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் 227 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருவெறும்பூர் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் ஏ.மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் முருகேசன், தெய்வநீதி, யு.பிரபு, மணப்பாறை ஒன்றியத்தில் ஒன்றி யச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மூத்த தோழர் ராஜகோபால், வையம்பட்டி ஒன்றியத் தில் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி, திண்டுக்கல் முத்துச்சாமி, சம்சுதீன், மருங்காபுரி ஒன்றியத்தில் ஒன்றியச் செய லாளர் தியாகராஜன், விதொச மாநிலப் பொரு ளாளர் எஸ்.சங்கர், கரூர் சக்திவேல், ராம மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
தா.பேட்டை ஒன்றியத்தில் ஒன்றியச் செய லாளர் எஸ்.பாண்டியன், மூத்த தோழர் ஆர். சுப்ரமணி, பாலகுமார், வீரவிஜயன், துறை யூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், சங்கிலிதுரை, மாநகர் பி. லெனின், பெரம்பலூர் கலையரசி, சிவானந்தம், தொட்டியம் ஒன்றியத்தில் வரத ராஜன், சத்தியமூர்த்தி, முருகன், மாநகர் எஸ். ரேணுகா, முசிறி ஒன்றியத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பூமாலை, மாநகர் ஜி.கே. ராமர், மணிமாறன், ரமேஷ், வீராசாமி, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் ஒன்றியச் செய லாளர் ஆர்.முத்துக்குமார், மங்கள்ராஜ், டி.முத்துக்குமார் பங்கேற்றனர். லால்குடி ஒன்றியத்தில் ஒன்றியச் செய லாளர் சி.ஜெகதீசன், எம்.பாலு, வழக்கறி ஞர் டி.வின்சென்ட், கவுன்சிலர் சாரதா, புள்ளம் பாடி ஒன்றியச் செயலாளர் டி.ரஜினிகாந்த், ஜார்ஜ், அரியலூர் அருணன், கிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் கனகராஜ், பால கிருஷ்ணன், சேகர், மாநகர் வெற்றிச்செல் வன், ஆர்.சம்பத், எஸ்.ரெங்கராஜன், ஆட்டோ சேகர், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் மனோ கர், எம்.ஜி.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சம்பத், ஜி.கோமதி, ஆணை முத்து ஆகியோர் இயக்கங்களில் பங்கேற் றும், ஒருங்கிணைத்தும் வழிநடத்தினர். சில இடங்களில் போலீசார் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனுமதி மறுத்தனர். இருந்தபோதிலும் மக்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.