districts

img

வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சார பேரணி நிறைவு

மயிலாடுதுறை, டிச.11 - மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்தை மீண்டும் இயக்கி காரைக்கால் வரை  சேவையை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டிச.8 அன்று  சைக்கிள் பிரச்சார பேரணி துவங்கி யது. மாவட்டம் முழுவதும் 250 கி.மீ  தொலைவு பயணித்த இப்பேரணி,  ஞாயிறன்று மாலை திருக்கடையூ ரில் பொதுக் கூட்டத்துடன் நிறை வடைந்தது.  சன்னதி வீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் தேவேந்திரன், மாவட்ட  துணைச் செயலாளர் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சபீர் அகமது, டி.வி.குமார், தரங்கம் பாடி ஒன்றியச் செயலாளர் பவுல் சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பின ருமான எம்.சின்னத்துரை, பூம்புகார்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன், மாநில செயற்குழு  உறுப்பினர் என்.ஆனந்தி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மணி பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருக்கடையூர் ஊராட்சித் தலை வர் ஜெயமாலதி சிவராஜ், செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், திமுக இளைஞரணி அமைப்பாளர் இரா.செந்தில் உட்பட பல்வேறு அர சியல் கட்சியினர் கலந்து கொண்ட னர்.