districts

img

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, நவ.13 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளை அதி கரிக்கும் விதத்தில் பொது முதலீடுகள் செய்யப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும். பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது நடைபெ றும் பாலியல் வன்கொடுமை கள் மற்றும் வன்முறைகளை தடுக்க வேண்டும். ஒரே தேசம், ஒரே தேர்தல் எனும்  திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதி குழு சார்பில் செவ்வாயன்று தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது.  ஏர்போர்ட் வயர்லெஸ் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கிளைச் செயலாளர் சித்ரா தலைமை  வகித்தார். சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ராமதாஸ் தலைமை வகித்தார். முடுக்குபட்டியில் நடை பெற்ற பிரச்சாரத்திற்கு கிளை செயலாளர் கணேசன்  தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மத்திய  கட்டுப்பாட்டு குழு உறுப்பி னர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், பொன் மலை பகுதி செயலாளர் விஜ யேந்திரன், மாதர் சங்க பகுதி செயலாளர் புவ னேஸ்வரி ஆகியோர் பேசி னர்.