districts

img

மருந்து வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்

புதுக்கோட்டை, ஜன.5 - மருந்து வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென மருந்து  வணிகர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணி கர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யாவிடம் வியாழக்கிழமை அளித் துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:  சமீப காலமாக தமிழ்நாட்டில் சமூக விரோத கும்பல்களின் செயல்பாடுகள் அதி கரித்துள்ளன. குறிப்பாக, வணிகர்களிடம் மாமூல் பெறுவது, உணவகங்களில் சாப்பிடு வதற்கு பணம் கொடுக்காமல் செல்வது, மருந்து வணிகர்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.  மேலும், கடந்த டிசம்பர் 29 அன்று இரவு  செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி  பகுதியில் மருந்தக உரிமையாளர் ஒரு கும்ப லால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள மருந்து  வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களுக் கும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.  இதற்கிடையில் இச்சம்ப வம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவுடிகள்  மீது கடும் நடவடிக்கை எடுத்தால்  வணிகர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் தொழில் செய்வர். மருத்துவ சேவை புரிபவர்களுக்கு  சட்டம் இயற்றப்பட்டது போல், அரசிற்கு வரி  வருவாயை ஈட்டித்தரும் மருந்து வணிகர் களையும் சமூக விரோத கும்பல்களி டம் பாதுகாக்க அனைத்து வணிகர்களை யும் இணைக்கும்படி சிறப்புச் சட்டம்  ஒன்றை இயற்ற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கும்பகோணம்  தஞ்சாவூர் மாவட்டம் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர்  அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மருந்து வணிகர்கள் சங்க  மாவட்டத் தலைவர் நடராஜன், செயலா ளர் சோலை சிவம், பொருளாளர் ராதாகிருஷ் ணன், நகரத் தலைவர் சண்முகம், செயலா ளர் கணேஷ் மற்றும் ரவி கலந்து கொண்ட னர்.