திருச்சிராப்பள்ளி, ஜூலை 10 -
ஆப்ரஹாம் ஐஏஎஸ் பிறப்பித்த உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும். அரசு நடத்திய கூட்ட அமர்வு முடிவுகளை செயல்படுத்த வேண்டும். ஜிபிஎப், எஸ்பிஎப் வழங்கப்படாத வர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை வருகிற பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கம் சார் பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் எஸ்.சாமி நாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மணப்பாறை வட் டத்தலைவர் பி.புருஷோத்த மன், சங்க மாவட்டச் செயலா ளர் கே.எம்.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஓய்வு பெற்றோர் கழக நல அமைப்பு மாநிலத் துணைத்தலைவர் சண் முகம், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலை வர் சந்திரசேகரன், சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், மாநில துணைத்தலைவர் தங்க வேல் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத்தலைவர் தங்கராசு நன்றி கூறினார்.