districts

img

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜுலை 16- ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு 140 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு எந்தவித விவாதங்களுமின்றி 3 குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரஷா சன்ஹிதா மற்றும்  பாரதிய சாஷ்ய ஆதினியம் என்று சமஸ்கிரு தத்தில் பெயரிடப்பட்ட சட்டங்கள் ஜுலை 1 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

இந்த சட்டங்கள் ஜனநாயக உரிமை களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துப வர்களை நசுக்குவது, நீதித்துறையின் அதிகா ரத்தை முழுமையாக பறிப்பதாக உள்ளது. எனவே ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3  குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பாலக்கரை பகுதிக்குழு சார்பில் திங்களன்று  சங்கிலியாண்டபுரம் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை  விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மூத்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், ஜே.எ.சி.சி கூட்டமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பேசினர். 

கும்பகோணம்

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் மாநகர குழு  செயலாளர் கா.செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். போராட் டத்தை விளக்கி தஞ்சை மாவட்டச் செய லாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், அருளர சன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி,  நாகராஜன் சிஐடியு மாவட்டத் தலைவர்  கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.