தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், சட்டப்படியான கூலி ரூ.319 வழங்க வேண்டும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. வட்டார செயலாளர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். கரும்பு விவசாய சங்க மாநில நிர்வாகி அரிதாசு, யாசர் அரபாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.