திருச்சிராப்பள்ளி, ஜூலை 22 - ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணி யாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்க ளன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஊராட்சிகளில் பணியாற்றும் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்கு பவர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு சட்டப்படியான கூலியை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு ஊதியத்துடன், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஊராட்சிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும். குடிநீர் தொட்டி சுத்தம் செய்ய சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஊராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது ஒரு மாத கருணைத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் திங்களன்று இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி சிஐடியு திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் திருச்சி புறநகர் மாவட்ட குழு சார்பில் திங்களன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல் வம் தலைமை வகித்தார். சிஐடியு புற நகர் மாவட்ட தலைவர் சம்பத், மாவட்டச் செயலாளர் சிவராஜ், கட்டு மான சங்க மாவட்டத் தலைவர் தியாக ராஜன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பி னர் அழகர்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க திருச்சி மாவட்டப் பொருளாளர் முரு கேசன் நன்றி கூறினார். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் கே. கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் எஸ்.காமராஜ், கே. ஆறுமுகம், டி.கலியமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார். அமைப் பின் மாவட்டச் செயலாளர் எம்.முரளி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கே.கலியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்டப் பொருளாளர் டி.மணிவேல், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஜெயா, சிஐ டியு மணல் மாட்டு வண்டித் தொழிலா ளர்கள் சங்கம் எம்.கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பி.ஜேசுதாஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரி யப்பன், மாவட்டத் தலைவர் எம்.கலைச் செல்வன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சிஐடியு மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். கரூர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜமுகமது, மாவட்ட துணைத் தலைவர் கா.கந்த சாமி, டாஸ்மாக் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட பொருளாளர் ப.சரவணன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் கே. சக்திவேல் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.