திருச்சிராப்பள்ளி, ஜன.1 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் துறையூர் கோட்ட மாநாடு துறை யூர் பாலக்கரை ஜெய்கார்டனில் நடை பெற்றது. மாநாட்டிற்கு கோட்டத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாநாட்டை சிஐடியு மாநில துணைத் தலை வர் ரெங்கராஜன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வேலை அறிக்கையை கோட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் வாசித்தார். மலைப் பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின் வாரியத்தை மேலும் இரண்டு கம்பெனி களாக பிரிப்பதை கைவிட வேண்டும். மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் வகை யில், கொண்டு வர உள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். BP2-வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய தலைவராக வி. செல்வம், செயலாளராக ரவிச்சந்திரன், துணைத் தலைவராக சுப்பிரமணியன், துணைச் செயலாளர்களாக சீனிவாசன், நமநாதன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வா கக் குழு தேர்வு செய்யப்பட்டது.