பாபநாசம், நவ.1 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் முன்புறமுள்ள காம்ப வுண்ட் சுவரின் ஒரு பகுதி இடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இதேபோன்று பக்க வாட்டு காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி இடிந்த நிலையில் உள்ளது. எனவே மாண வர்களின் பாதுகாப்புக் கருதி பள்ளியைச் சுற்றியுள்ள காம்பவுண்ட் சுவரை முற்றிலும் இடித்து விட்டு, புதிதாக, உயரமாக, தரமாக கட்ட வேண்டுமென்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று பள்ளியில் ஓடு வேய்ந்த கட்டடம் ஒன்று பயன்பாட்டில் இல்லை. அதை யும் இடித்து விட வேண்டுமென்றும், மாண வர்கள் பயன்பாட்டில் உள்ள பள்ளிக் கட்டடத் தில் மழை நாட்களில் நீர் கசிகிறது. இதை யும் சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்டக் கவுன்சிலர்கள் இதில் கவனம் செலுத்துவார் களா என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.