districts

திருமண அலங்கரிப்பாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி,ஜன, 5- தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த மேடை அலங் கரிப்பாளர்க ளுக்கான போட்டி மற்றும் விருது வழங்கும் விழா திருச்சியில் ஞாயிறன்று நடைபெற்றது.  இந்த விழாவிற்கு சங்க மாநில தலைவர் பால முருகன் தலைமை வகித் தார். துணைத் தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மணிகண்டன், மாநில செயலாளர் சிவக் குமார் ஆகியோர் உரை யாற்றினர்.  தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்களுக்கு விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு ஒன்றிய,  மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். தீ விபத் துக்களால் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பீட்டுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும். என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் மாநிலப் பொரு ளாளர் சின்னப்பன், திருச்சி மாவட்ட தலைவர் சந்திரசே கர், செயலாளர் அப்துல் காதர் மற்றும் பலர் பங்கேற்ற னர்.