districts

img

உயர் மின் கோபுரங்களால் பாதிப்பு: கூடுதல் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

கரூர், ஜன.4 - உயர்மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு  மின் தொடரமைப்பு கழகம் ஆகிய இரண்டு  நிறுவனங்களால், உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் நடைபெற்றது. இப்பணி யின் போது ஏராளமான விவசாய நிலங்களின்  வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட் டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.  ஆனால் கோரிக்கைகள் மீது எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. க.பரமத்தி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உயர் அழுத்த மின் கோபு ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவ சாயிகளுக்கு தொழில் துறை அரசாணை எண்.54-ன் படி கூடுதல் இழப்பீடு மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். புதை வடம் கேபிள்களை சாலையோரத்தில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபு ரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் வியாழனன்று கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. க.பரமத்தி கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் கா.கந்தசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மாவட்ட பொரு ளாளர் கே.சுப்பிரமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், பொருளாளர் ப. சரவணன், விதொச ஒன்றிய செயலா ளர் எம்.கே.மணியன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.  கடவூர் ஒன்றிய கவுன்சிலர் பி.ராம மூர்த்தி, நெடுங்கூர் ஊராட்சி மன்ற முன்னாள்  தலைவர் ஆர்.நல்லசிவம், ஆரியூர் ஊராட்சி  மன்ற தலைவர் டி.சீரங்கராயன், தவிச மாவட்ட துணைச்  செயலாளர் சாமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பின்னர், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட  63 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி யரிடம் வழங்கினர்.