தஞ்சாவூர், ஆக.10 -
சர்க்கரை ஆலைத் தொழிலா ளர்களுக்கு, கடந்த 33 ஆண்டு களாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி ஒரே மாதிரி யான ஊதியத்தை வழங்க வேண் டும் என சர்க்கரை ஆலைத் தொழி லாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பாக வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் சர்க் கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற் றது.
உண்ணாவிரதப் போராட் டத்தை ஐஎன்டியுசி மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.சுப்ரமணி யன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். சர்க்கரை ஆலை தொழிற் சங்க கிளைத் தலைவர் (சிஐடியு) எஸ்.செல்வராஜ் கோரிக் கை களை வலியுறுத்திப் பேசினார்.
இதில், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைக ளில் கடந்த 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்.
இரட்டை ஊதிய முறையை ஒழிக்குமாறு சென்னை தொழில் தீர்ப்பாயம் கடந்த 2002- ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை சர்க்க ரைத்துறை ஆணையரகம் அமல் படுத்த வேண்டும்.
சர்க்கரை ஆலையில் பணி யாற்றும் தினக்கூலி, தற்காலிக பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.
உண்ணாவிரதப் போராட் டத்தை சர்க்கரை ஆலைப் பணியா ளர்கள் சங்க தலைவர் சிவக் குமார் முடித்து வைத்தார். போராட் டத்தில் அனைத்து தொழிற்சங் கத்தை சேர்ந்த 100-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.