சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பொதுக் குழு கூட்டம் கடந்த 10.6.2024 அன்று தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பிட வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், நீலகிரி எம்.பி., ஆ.ராசா, பெரம்பலூர் எம்.பி., அருண்நேரு ஆகியோரிடம் எஸ்கேஎம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தில்லி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு தலைவர்கள் என்.செல்லதுரை, ஆர்.ராஜாசிதம்பரம் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.