districts

திருச்சி முக்கிய செய்திகள்

வெள்ள நிவாரண நிதி ரூ.50 ஆயிரம் முதல்வரிடம் வழங்க முடிவு

பாபநாசம், ஜன.8- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூகக் கல்வி சங்க செயற் குழுக் கூட்டம் தலைவர் தேவராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் புவனேஸ்வரி, செயலாளர் கண்ணதாசன், கண்ணன், சிவக் குமார், பொருளாளர் உஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதியாக ௹. 50,000 வழங்குவது, சிறு தானிய உணவுத் திருவிழா நடத்துவது, இளைஞர்களுக்கு இலவசமாக பிளம்பர், எலக்ட்ரிசியன் பயிற்சியளிப்பது, தோல், கண் பரிசோதனை முகாம் நடத்துவது, பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாபாசம் அருகே சுற்றுச்சூழல் பூங்கா தமிழக வனத்துறை உத்தரவாதம்

பாபநாசம், ஜன.8- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள  ராஜகிரி குடமுருட்டி, திருமலைராஜன் ஆற்றுப் படுகையின் கரையில் கிராம மக்களின் பொழுது போக்கிற்காக பூங்கா அமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள்  ஊராட்சி மன்றத் தலைவர் சமீமா பர்வீன் ஆகியோர் தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக் கான அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். பாபநாசம்  சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மனு அளித்தனர்.  இதையடுத்து  தமிழ்நாடு அரசு வனத்துறையின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர்  சு.ந.தேஜஸ்வி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் 2024-25- ஆம் ஆண்டில் ராஜகிரி ஊராட்சியில் மரகதப் பூஞ்சோலை திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் லாபம் ரூ.10 கோடி: மகாசபையில் தகவல்

கும்பகோணம், ஜன. 8– தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் அங்கத் தினர்களாக 1830 உறுப்பினர்களும் 100 பணியாளர்களும் உள்ளனர்.  திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் வாடிக்கையாளர்க ளுக்கு விருப்பத்திற்கு ஏற்ப பட்டுப் புடவைகள் சங்க கைத்தறி நெச வாளர்களை கொண்டு தரமானதாக வும் வாடிக்கையாளர்களின் எண்ணத்தின்படி டிசைன்கள் உடனடியாக அமைத்து வெள்ளி ஜரிகை பட்டுப் புடவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது  இந்நிலையில் சங்கத்தின் 68-ஆவது ஆண்டு மகாசபை திங்களன்று நடைபெற்றது மேலாண்மை இயக்குநர் தலைமை வகித்தார் பேரவையில் சங்கத்தின் வரவு-செலவு அறிவிக்கப்பட்டது. அப்போது, 2022-23 நிதியாண்டின் சங்க கைத்தறி நெசவாளர்கள் நெய்த பட்டுபுடவைகள் விற்பனை 51.50 கோடி. இதன் மூலம் சுமார் 10 கோடி சங்கத்திற்கு லாபம் கிடைத்துள்ளது. சங்கத்தினர்க ளுக்கு லாபத்தின் அடிப்படையில் கூலியில் 38.60 போனசாகவும் பங்கு தாரர்களுக்கு 14 சதவீதம் பங்குத் தொகையாவும்  அங்கத்தினரின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது தொடர்ந்து உறுப்பினர்களுக்கு ஆண்டு அறிக்கைகள் வழங்கப் பட்டது அதில், பிரதமர் மோடி படம் இல்லை எனக் கூறி திருபுவனம் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் சங்க உறுப்பினர்களுமான  நாகேந்திரன், ராமச்சந்திரன்  மேலாண்மை இயக்குநரை தாக்கும் வண்ணம் அநாகரீகச் செயலில் ஈடுபட்டு கூச்சலிட்டனர். இதையடுத்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. அதனடிப் படையில் திருவிடைமருதூர் காவல்துறையினர் நாகேந்திரன் ராம கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  இதுகுறித்து பாஜக அல்லாத சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கும் போது பல்வேறு போராட்டத்தின் அடிப்படையில் சங்கம் திருபுவனம் கைத்தறி நெசவாளர்களின் உழைப் பில் தரமான பட்டுப் புடவைகளை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து 68 ஆண்டுகளாக வெற்றி நடைப்போடுகிறது இருப்பினும்  சங்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத் தவே பாஜக-வினர் உறுப்பினர் களுக்கு எவ்விதத்திலும் பயனில் லாத பிரச்சனைகளை எழுப்பி கல வரத்தில் ஈடுபட்டனர் இது கண்டிக் கத்தக்கது என்றனர்.

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

தஞ்சாவூர், ஜன.8-  அரசுப் பள்ளிகளில் 9 மற் றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத் தைச் சார்ந்த பெண் குழந்தை களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.  இது குறித்து தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத் தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட் டத்தின் கீழ் அரசுப் பள்ளி களில் 9 மற்றும் 10-ஆம் வகுப் புகளில் பயிலும் பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமா னம் ரூ. இரண்டரை லட்சத் திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவி களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம். கல்வி உதவித்தொகை யாக வழங்கப்படும்.இதில் பயன்பெற அரசுப் பள்ளிக ளில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளில் அல்லது அஞ்சல் வங்கி களில் தமது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை வரு மான சான்று மற்றும் ஜாதிச் சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமைஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளி தலைமை ஆசி ரியர்கள் மாணவிகளது விபரங்களை இஎம்ஐஎஸ் என்ற (Eduational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயமங்கலம் பகுதியில் போதிய மழை  இல்லாமல் கருகிய நெற்பயிர்கள் 

சிவகங்கை, ஜன.8- டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் கிட்டத்தட்ட 27 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தண்ணீரில்  மூழ்கியுள்ள பயிர்கள் இன்னும் பத்து, இருபது நாட்களில் அறுவடைக்குத் தயாராக உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஓரு புறம். மற்றொரு புறத்தில் சிவகங்கை மாவட்டம் தாய மங்கலம் பகுதியில் மழை இல்லாமல் கருகியுள்ள நெற் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தியுள்ளன. சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டம் தாய மங்கலம் பிரிக்காவை சேர்ந்த காரைகுளம், இண்டங் குளம், குப்பகுளம், வண்ணாரவயல், பொன்னியந்தல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் அனைத்தும் காய்ந்து விட்டன.  இதனால் விவசாயிகள் பெரும்  நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதனை ஈடு கட்டும் விதமாக வருவாய்த்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் வறட்சி பாதித்த பகுதியை உடனடியாகப் பார்வையிட்டு உரிய இழப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.