தஞ்சாவூர், ஆக.24 - அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின், டெல்டா மாவட் டங்களின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாநிலத் தலைவரும், கந்தர்வ கோட்டை சட்டப்பேரவை உறுப்பின ருமான எம்.சின்னத்துரை தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்த லிங்கம், மாநில பொருளாளர் ஏ. பழனிச்சாமி, மாநிலச் செயலா ளர்கள் வி.மாரியப்பன், கே.பக்கிரி சாமி, மற்றும் மாநில நிர்வாகிகள், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டத் தலைவர் ஆர். பிரதீப் ராஜ்குமார், திருச்சி, புதுக் கோட்டை, திருவாரூர், நாகை, கட லூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 40-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் சந்திக் கும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. விவசாயத் தொழிலா ளர்களுக்கான கூலி, குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கான கூலி, நூறுநாள் வேலைத் திட்டம், குடிமனைப் பட்டா, விவசாயத் தொழி லாளர்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டம் ஆகிய பிரச்சனைகளுக்கான போராட்டங்களை முன்னெடுப்பது, 2024-25 ஆண்டுக்கான உறுப்பினர் பதிவை துவக்குவது, விவசாயத் தொழிலாளர்களின் மகத்தான தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.