districts

திருச்சி முக்கிய செய்திகள்

715 பள்ளி வாகனங்கள் ஆய்வு 

தஞ்சாவூர், மே 11-  தஞ்சாவூர் ஆயுதப் படை மைதானத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுப் பணி மாவட்ட வருவாய்  அலுவலர் தெ.தியாக ராஜன் தலைமையில் சனிக்கிழமை  நடை பெற்றது. தஞ்சாவூர் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில் 235 பள்ளி வாகனங்களும்,  பட்டுக்கோட்டை அரசி னர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 260  வாகனங்களும், கும்ப கோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் 220 வாகனங்களும் என மொத்தம் 715 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற் கொள்ளப்பட்டன. குறைபாடுகள் உள்ள  வாகனங்களின் குறை களை சரிசெய்து மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பள்ளி வாக னங்கள் தகுதிச் சான்று பெற்ற பின்னர் பொது சாலையில் இயக்கப்பட வேண்டும். பள்ளிகள் திறந்த பின் பொது சாலையில் தணிக்கை செய்யும் பணிகள் நடை பெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவ லர்கள் தெரிவித்தனர். ஆய்வின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், மாவட்ட தொடக்கக் கல்வி  அலுவலர் அமலா, துணை காவல் கண்கா ணிப்பாளர் முத்தமிழ்  செல்வன், போக்கு வரத்து ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உயிரிழந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு

திருச்சிராப்பள்ளி, மே 11 - திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா (70). இவருக்கு முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நிலை மிகவும் மோசமானதால் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் அவ சர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை  பலனின்றி வெள்ளியன்று உயிரிழந்தார். உடலை உறவினர் கள் ஆம்புலன்ஸ் மூலம்  எடுத்துச் செல்ல ஏற்பாடு  செய்தனர். அவரது உடல்  சிகிச்சை பெற்று வந்த வார்டில் போர்வை போட்டு மூடி வைக்கப் பட்டிருந்தது. உறவினர் கள் உடலை ஆம்புலன் ஸில் ஏற்ற வந்தபோது, அவரது காதில் கிடந்த தோடுகளையும், கழுத்தில்  கிடந்த 2 பவுன் சங்கிலி யையும் காணவில்லை.  மூதாட்டியின் தோடை  கழற்றி எடுக்காமல் பிடுங்கிய வகையில்  காதுகள் அறுக்கப்பட்டிருந் தது. பின்னர் தேடிப் பார்த்தபோது அதில் ஒரு  தோடு மட்டும் கீழே கிடந் துள்ளது. மர்ம நபர்கள் தோடை எடுக்க முயன்றுள் ளனர். அதற்குள் உற வினர்கள் வந்து விட்ட தால் தோடை அந்த இடத் திலேயே போட்டுவிட்டுச் சென்று விட்டனர் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீ சார் வழக்குப் பதிந்து சிசி டிவி காட்சிகளைக் கொண்டு  விசாரணை நடத்தி வரு கின்றனர்.

வழி தவறி வந்த சிறுவன்  உறவினரிடம் ஒப்படைப்பு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

அரியலூர், மே 11- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே  உள்ள தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா.  அவரது மனைவி காமாட்சி ஆகியோர் பார்வை மாற்றுத்திற னாளிகள். இவர்கள் தற்போது வடலூரில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிய வருகிறது. இளையராஜா-காமாட்சி தம்பதியினருக்கு சூர்யா(9) என்ற  மகனும், அன்பழகி (6) என்ற மகளும் உள்ளனர். இவர்கள்  வடலூரில் பிச்சை எடுத்து தொழில் நடத்தி வருவதால் அதை  விரும்பாத அத்தை அமுதா, மேற்கண்ட இரண்டு குழந்தை களையும் பெற்றோரின் ஒப்புதலுடன், தேனாம்படுகை அழைத்து வந்து வளர்த்து படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் வெள்ளியன்று காலை வழி தவறி கும்பகோ ணம் வந்த, சிறுவன் சூர்யா கும்பகோணத்தில் இருந்து ஜெயங் கொண்டம் வரக்கூடிய நடேசன் தனியார் பேருந்தில் ஏறி வந்து உள்ளார்.  சிறுவன் மட்டும் தனியாக பயணம் செய்வதை அறிந்த பேருந்தின் நடத்துநர் வினோத், சிறுவன் சூர்யாவை ஜெயங் கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சிறு வனுக்கு இரவு டிபன் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து,  பின்னர் சிறுவனிடம் விசாரணை செய்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன், சிறுவன் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் சூர்யாவின் உறவி னர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தேனாம்படுகை  கிராமத்தில் இருந்து வந்த சூர்யாவின் உறவினர்கள், சிறு வனை அழைத்துச் சென்றனர்.  வழி தெரியாது தவித்த சிறுவனை மீட்டு, அவர்களின் உறவி னர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

உளுந்தில் மஞ்சள் தேமல் நோய்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பாபநாசம், மே 11 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் சுமார் 300 ஹெக்டேர் பரப்பில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக உளுந்தில் மஞ்சள்  தேமல் நோய் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  நோயின் முதல் அறிகுறியாக இளம் இலைகளில் மஞ்சள் நிற  புள்ளிகள் ஆங்காங்கே காணப்படும். பின்னர் இலைகள் முழு வதும் திட்டுத் திட்டாக ஒழுங்கற்ற வடிவில் காணப்படும். சில  சமயம் நோயுற்ற இலைகள் சிறுத்தும், சுருங்கியும் காணப்ப டும். நாளடைவில் மஞ்சள் நிறம் அதிகமாகி, சில இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாகும். நோய் தாக்கப்பட்ட செடிகள் தாமதமாக காய்ப்பிற்கு வருவ துடன், குறைந்த எண்ணிக்கையில் காய்கள் காய்க்கும். நோய்  முற்றியச் செடிகளில் காய்களும், விதைகளும், மஞ்சள் நிறமாக  மாறி விடும். பயிரின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால், முழு வதுமாக மகசூல் இழப்பு ஏற்படும். மஞ்சள் தேமல் நோய் ஒரு  வைரஸ் நோயாகும். இந்நோய் பெமிசீயா டபாசி என்ற ஒரு வகை  வெள்ளை ஈக்களினால் பரப்பப்படுகிறது.  மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு ரகங்கள் அல்லது நோயி னைத் தாங்கி வளரும் ரகங்களான வம்பன் 4 மற்றும் வம்பன் 5  பயிர் செய்ய வேண்டும். வரப் போர பயிர்களாக 2 வரிசைகளில் மக்காச் சோளத்தை பயிரிட வேண்டும். ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் ஒட்டுப் பொறியினை இட வேண்டும். நோயி னால் தாக்கப்பட்ட செடிகளை ஆரம்பத்திலேயே பிடுங்கி அழித்திட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 5 மிலி என்ற அளவில்  இமிடாகுளோபிரிட் 600 எப்எஸ் உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைத்த 30 ஆவது நாள் டைமீத்தோயேட் 0.1 சத வீதம் இலை வழி தெளிப்பு செய்திட வேண்டும். இவ்வாறு கட்டுப் பாட்டு முறையை கடைப் பிடிப்பதினால் மஞ்சள் தேமல்  நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு அதிக மகசூல் எடுக்கலாம்” என  தெரிவித்துள்ளார்.

சாய்ராம் பள்ளி  நூறு சதவீதம் தேர்ச்சி

மன்னார்குடி, மே 11- திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் 88 பேர்  100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனந்த், சிவபாலா,  தேவா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர். பாட வாரியாக கணினி அறிவியலில் 10 பேர், கணிதம்  8 பேர், இயற்பியல் 1, கணக்குப் பதிவியல் 1 என நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர் ஆனந்த் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று உள்ளார். இதையொட்டி, தலைமை நிர்வாகி சாய்  பிரகாஷ் லியோ முத்து, நிர்வாக பிரதிநிதி சோமசுந்தரம், முதல்வர் கஜேந்திரன் ஆகியோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டினர். இதே போன்று, இப்பள்ளி 10 ஆம் வகுப்புத் தேர்வில்  495 மதிப்பெண் எடுத்து திருவாரூர் மாவட்டத்திலேயே மூன்றாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமகாதேவ குருஜி பள்ளி  நூறு சதவீதம் தேர்ச்சி

திருவாரூர், மே 11- திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள ஸ்ரீமகாதேவ  குருஜி வித்யாலயா பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று, 25 ஆவது  ஆண்டாக தொடர் சாதனை புரிந்துள்ளனர். மாணவி பி.யோகபாலினி மற்றும் ஏ.ஜெஸியா 490  மதிப்பெண் பெற்று முதலிடமும், ஏ.கோபிகா, எம்.ஷஃபிகா, எம்.ஸ்ரீமதி ஆகியோர் 488 மதிப்பெண் பெற்று  இரண்டாம் இடமும், பி.ராஜ்ஸ்ரீ 485 மதிப்பெண் பெற்று  மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள னர். தேர்வு எழுதிய மாணவ,மாணவிகள் அனைவரும் முதல் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர்  எம்.டி.பாணி மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

அசோகா சிசுவிகார்  பள்ளி மாணவியர் சாதனை

மன்னார்குடி, மே 11- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசோகா சிசு விஹார் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கே.சுப்ரியா பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று முத லிடத்தையும், எஸ்.கே.சுப்ரியா 491  மதிப்பெண்கள் பெற்று  இரண்டாம் இடத்தையும், பி.கமலேஷ் 489 மதிப்பெண் கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்து உள்ளனர்.  மாணவிகள் கே.சுப்ரியா, வி.மோகன பிரபா, பி.கம லேஷ், எஸ்.சஹானா, டி.கே.நிகிதா, எஸ்.அஸ்மதுல் ஜெஸ்ரியா, ஆர்.கே.நிவேதா ஆகியோர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவி யர் ஆர்.தனவர்ஷினி, வி.மோகனபிரபா ஆகியோர் சமூக  அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ரெண்டாம்புளிக்காடு  அரசுப் பள்ளி  நூறு சதவீதம் தேர்ச்சி 

தஞ்சாவூர், மே 11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ரெண்டாம்புலிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் தேர்வு எழுதிய 12 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவி வாஷினி 449 மதிப்பெண்களும், அசுவதி 444  மதிப்பெண்களும், மாணவி காவியா 411 மதிப்பெண் களும் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். வெற்றி  பெற்ற மாணவிகள், பாடுபட்ட தலைமை ஆசிரியர் விஜய கௌரி மற்றும் ஆசிரியர்களை பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டி வாழ்த்து  தெரிவித்தனர். 

பொறையார் சர்மிளா பள்ளி மாவட்ட அளவில் 3 ஆம் இடம்

மயிலாடுதுறை, மே 11 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வில் மாவட்ட அளவிலான தர வரிசையில் 3  ஆவது இடத்தை பிடித்துள்ளது. பள்ளி அளவில் எம்.தீபிகாஸ்ரீ என்ற மாணவி 495  மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், டி.ஜி.எம். அம்ச வள்ளி 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், கே. முகமது முஃபிஸ் என்ற மாணவர் 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், கே.யஷ்வந்தினி, பி.சாதனா ஆகியோர் 490 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும், டி.ஜான்வி, கே.அபிஷேக் கிருஷ்ணா, டி.அனுஷ்கா ஆகி யோர் 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் ஐந்தாமி டமும் பிடித்துள்ளனர். கணிதத்தில் 4 பேரும், அறிவியலில் 4 பேரும், சமூக அறிவியலில் 2 பேரும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை முதல்வர், ஆசிரியர்கள்,  அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.

பெருமாக்கநல்லூரில் தூர்வாரும்  பணி முறையாக நடக்கவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

பாபநாசம், மே 11 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பெருமாக்க நல்லூரில், பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த தூர்வாரும் பணி முறையாக நடை பெறவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த வாய்க்கால் பெருமாக்கநல்லூருக்கு பாசன வாய்க்காலாகவும், வடிகாலா கவும், காவலூருக்கு பாசன வாய்க்காலாகவும் பயன்படுகிறது. இந்த வாய்க்காலை 3 கிலோ மீட்டர் தூரம் தூர்வார வேண்டும்.  ஆனால் தற்போது நடந்து வரும் தூர்வாரும் பணி பெயர ளவிற்கே நடக்கிறது. அகலமாக, ஆழமாக தூர்வாரப்படவில்லை.  இந்த வாய்க்காலால் 500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறு கிறது. 6, 7 வருடங்களுக்கு முன்புதான் இந்த வாய்க்கால் தூர்வாரப் பட்டது. இந்த வாய்க்காலால் இரண்டு ஊராட்சியைச் சேர்ந்த 4  ஊர்கள் பயன்பெறுகின்றன. இந்தப் பணிக்கான ஆர்டர் நகலை கேட்டால் தரவில்லை. திட்ட மதிப்பீடு, தூர் வாரும் தூரம் உள்ளிட்ட விபரம் அடங்கிய போர்டு வைக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம்  இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூர், மே 11 - 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில், கடலூர் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி(எ) பட்டுசாமி (31). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்திலுள்ள ஒரு ஜவுளிக் கடையில் கடந்த 2022 ஆம்  ஆண்டு வேலை செய்த போது, அதே கடையில் வேலை செய்த 13 வயது சிறுமியை கோயம்புத்தூ ருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்  காவல் துறையினர், செல்வமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை  அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை  விசாரித்து வந்த நீதிபதி செல்வம், குற்றவாளி செல்வ மணிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்ப ளித்தார். இதையடுத்து செல்வமணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குடிநீர் குழாயுடன் பொருத்திய மின் மோட்டார்கள் பறிமுதல்

தஞ்சாவூர், மே 11-  தஞ்சாவூர் அருகே வல்லம் பேரூராட்சிப்  பகுதியில் குடிநீர் குழாயுடன் பொருத்தப்பட்ட  12 மின் மோட்டார்களை அலுவலர்கள் வியா ழக்கிழமை பறிமுதல் செய்தனர். வல்லம் பேரூராட்சிப் பகுதியில் குடிநீர் குழாயில் மின் மோட்டாரை இணைத்து தண்ணீர் எடுக்கப்படுவதாகவும், அதனால் பல வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் கிடைக்க வில்லை எனவும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு  தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்பேரில், வல்லம் பேரூராட்சி அலுவ லர்கள் அப்பகுதியில் வியாழக்கிழமை வீடு,  வீடாகச் சென்று குடிநீர் இணைப்பைச் சோத னையிட்டனர். அப்போது, 12 வீடுகளில் குடிநீர்  குழாயில் மின் மோட்டார்கள் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி எடுப்பது தெரிய வந்தது. இதையடுத்து, 12 மின் மோட்டார் களையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.  இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப் படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

தைல மரங்களை அகற்ற சட்டப் போராட்டம் தொடரும்

புதுக்கோட்டை, மே 11 - தைல மரங்களை அகற்ற சட்டப் போராட்டத் தைத் தொடர்வதுடன் மக்களைத் திரட்டி  போராட்டம் நடத்துவது என சுற்றுச்சூழல் பாது காப்பு சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் புதுக்கோட்டையில் ஜி.எஸ்.தனபதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானம் வருமாறு:  1974 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் உருவாக்கப்பட்டு தைல மரங்கள் நடவு செய்யப்பட்டன. இதற்காக புதுக் கோட்டை மாவட்டத்தில் காப்புக் காடுகள் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் இருந்த புதர்க் காடுகள், சோலைக்காடுகள் எல்லாம் அழிந்து போயின.  தைலமரக் காடுகளில் இருந்து மழைநீர் வெளியே வராமல் தடுக்கப்பட்டுள்ளது. குளங்க ளுக்கு தண்ணீர் வரவில்லை, விவசாயம் அழிந்து போனது. சுற்றுச்சூழலும் கெட்டுப் போனது. பல்லுயிர்ப் பெருக்கம் இல்லாமல் போனது. எனவே தைலமரக் காடுகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் வழக்கு தொடர்ந்து பெற்ற தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்தி லும் தொடர் சட்டப் போராட்டங்களை நடத்து வதற்காக மூத்த வழக்குரைஞர் ஏ.சந்திரசேக ரன் தலைமையில் ஒரு குழுவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட்டத்துக்கு திரட்ட கே.எம்.சரீப் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தீர்மானத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரை ஞர் த.குருசாமி, வழக்குரைஞர்கள் மாரி யப்பன், ஏ.சந்திரசேகரன், கே.எம்.சரீப், அரி மளம் ஒன்றியக் குழுத் தலைவர் மேகலா முத்து  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.