டிச.24 மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்
கும்பகோணம், டிச.22 - கும்பகோணம் கோட்டாட்சியர் ஹிருத்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிக்குலே சன் மேல்நிலைப் பள்ளி யில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் டிச.24 அன்று காலை 11 மணியளவில் கும்பகோணம் சார் ஆட்சி யர் தலைமையில் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறனா ளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.
பனை விதைகள் நடல்
பாபநாசம், டிச.22 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை நகர்நல மன்றம் சார்பில் பைபாஸ் ரோடு, சூலமங்கலம், மணக்காடு வாய்க்கால் கரையோரங்களில் நிலத்தடி நீருக்கு ஆதார மாக விளங்கும் பனை மர விதைகள் நடும் நிகழ்வு நடந்தது. இதில் முன் னாள் அரசு வழக்கறிஞர் துளசிஅய்யா பனைமர விதைகளை நடும் நிகழ்வை துவக்கி வைத் தார். அய்யம்பேட்டை பேரூ ராட்சி துணைத் தலைவர் அழகேசன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர், டிச.22 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனம் திருமண மஹாலில், கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி ஏ.வி.ஆர் தனலட்சுமி ஜூவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாமை ஞாயிறன்று நடத்தின.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். தன லெட்சுமி ஜூவல்லர்ஸ் உரி மையாளர் அபிஷேக் ராஜ் பாலாஜி முகாமை துவக்கி வைத்தார்.
இதில், 368 பேர் புற நோயாளிகளாக கலந்து கொண்டனர். 55 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து, மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளுவர் உருவச்சிலை வெள்ளி விழா போட்டிகள்
மயிலாடுதுறை, டிச.22 - அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை 01.01.2000 அன்று முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் மு.கருணாநிதியால், கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வெள்ளி விழா நிகழ்ச்சி டிச.23 முதல் 31 வரை கொண்டாடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க பேச்சுப்போட்டி, வினாடி-வினா மற்றும் திருக்குறள் ஒப்பு வித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. டிச.26 காலை 10.30 மணிக்கு பேச்சுப்போட்டி, டிச.27 காலை 10.30 மணிக்கு வினாடி வினா மற்றும் டிச.30 காலை 10.30 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் சீர்காழி முழுநேர கிளை நூலகத்தில் நடைபெற உள்ளன. பேச்சுப் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகர்களும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் கலந்து கொள்ளலாம்.
பேச்சுப்போட்டியில் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் திருக்குற ளில் ஏதேனும் 5 அதிகாரங்களில் குழந்தைகள் பொருள் உணர்ந்து உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் சீர்காழி முழு நேர கிளை நூலகத்தில் நேரிலோ அல்லது 9443308485 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு டிச.25 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 9150658877 என்ற அலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5000/- ரூ.3000/- மற்றும் ரூ.2000/- பரிசுத் தொகை வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.