பாபநாசம், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வளமையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாற்றுத் திறனாளி மாண வர்கள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஹாட் பாக்ஸ், ஸ்கார்ப், பிஸ்கட் வழங்கப் பட்டன. முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) முருகன் வர வேற்றார். பாபநாசம் லயன்ஸ் கிளப் தலை வர் ராஜா முகமது, செயலர் ஜகதீசன், பாப நாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் சம்பந்தம், முன்னாள் தலை வர் பிரபாகரன், வருங்காலத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.