districts

img

மூல வைகையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் விடிய விடிய மழை வைகையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடமலைக்குண்டு, டி.13-  தேனி மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக, வைகை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான வெள்ளி மலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் வெள்ளியன்று காலை வைகை ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டது. வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து வந்த வெள்ளப் பெருக்கை கண்ட விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.  மேலும், நீர் பிடிப்புப் பகுதிக ளில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் இறங்க வோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அதி காரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள னர். வைகை ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது.