districts

img

சேதமடைந்து கிடக்கும் சிமெண்ட் சாலை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள நெடுவாசல் ஊராட்சி, பெருங்குடி பிரதான சாலையிலிருந்து கீழத்தெரு பகுதிக்கு செல்லும் சிமெண்ட் சாலை மிக மோசமாக சேதமடைந்து பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. உடனடியாக பழுதடைந்துள்ள சாலையை புதிதாக சீரமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.