கடலூர், ஜூலை 2- சுப்பிரமணியம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு விசாரணை கைதி படுகொலை செய்யப் பட்டதில் முதல் குற்றவாளி யான ஆய்வாளர் ராஜா இடமாற்றம் செய்யப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத் திற்கு கிடைத்த வெற்றி என்று கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் விவரம் வருமாறு: 2015 ஆம் ஆண்டு சந்தேக வழக்கில் கைது செய்யப் பட்ட, தலித் வகுப்பை சேர்ந்த பட்டம்பாக்கம் சுப்பிர மணியம் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலை யத்தில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக் கில் சாட்சிகளாக உள்ள வர்களில் பெரும்பாலா னோர், முதல் குற்றவாளி யான ஆய்வாளர் ராஜா என்கிற ராஜராஜன் பணி புரியும் வடலூர் காவல் நிலைய அதிகார வரம்புக் குள் வருகின்றனர். அதில் ஒரு சிலர் அவரின் கீழ் பணி புரியும் காவலர்கள் என்பதா லும், லாக்கப் படுகொலை நடந்த இடம் நெய்வேலி டவுன்ஷிப் அருகில் உள்ள காவல்நிலையம் என்பதால் பாதிக்கப்பட்டோர் அச்சுறுத் தலுக்கு உள்ளாகக்கூடும் என்பதாலும் அவரை இட மாற்றம் செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து வலி யுறுத்தி வந்தது. ஆய்வாளர் ராஜாவை இடமாற்றம் செய்ய காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரமணியத்தின் இணையர் ரேவதி மார்க்சிஸ்ட் கட்சி உதவியுடன் உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களும் ஒரு பக்கம் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்ற மறியல் போராட்டம், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் டிஜிபியை நேரில் சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது. மேலும் தமிழக உள்துறை செயலாளருக்கு ஜூன் 20 அன்று மனு அனுப்பப் பட்டது.
இக்காலத்தில் 304 பிரிவின் கீழ் இருந்த வழக்கை 302 (கொலை) மற்றும் எஸ்சி, எஸ்டி பிரி வின் கீழ் மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடுக்கப் பட்டது. கொலையானவர் தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் உரிய பிரிவுகளை இணைக்க ஏதுவாக உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதல் தரப்பட்டு, கடலூர் நீதி மன்றத்தில் இப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. ஆனால் அப்பிரிவுகள் இணைக்கப் பட்டதை எதிர்த்து முதல் மற்றும் இரண்டாம் எதிரிகள் தொடுத்த வழக்கில், 302 பிரிவை நீக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்ட நிலை யில், சிபிஎம் சார்பில் உச்ச நீதிமன்றம் சென்று தடை யாணை பெற்றோம். இடமாற்ற பிரச்சனை யில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரேவதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்ரவர்த்தி, குற்றவாளி ராஜாவை இடமாற்றம் செய்வது குறித்து 4 வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடந்த மாதம் 4 ஆம்தேதி உத்தர விட்டார். இந்நிலையில், ஜூலை1 அன்று வடலூர் காவல் நிலையத்திலிருந்து விழுப்புரம் காவல் சரகத் திற்கு ராஜாவை இட மாற்றம் செய்து காத்திருப்பு பட்டியலில் வைக்க டிஐஜி உத்தரவிட்டார். இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி களத்திலும் நீதி மன்றத்திலும் நடத்திய தொடர்ச்சியான போராட்டத் திற்கு கிடைத்த வெற்றி யாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் மாதவன் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட வரின் இணையர் ரேவதி தற்போது சிபிஎம் நெல்லிக் குப்பம் பகுதிக்குழு உறுப் பினராகவும், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொருளாளராகவும் பணி யாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.