நாகப்பட்டினம், நவ.21- நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்க ளாக கன மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, கீழ்வேளூர், திருக்குவளை, கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்ட அருந்தவம்புலம் பகுதி யில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் சுமார் 40 ஏக்கருக்கும் மேல் மழைநீரில் மூழ்கி யுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் வி. மாரிமுத்து நேரில் பார்வை யிட்டார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் நிவாரண தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், சிபிஐஎம் ஒன்றியச் செயலாளர் வி.ராஜகுரு, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ராஜா, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் தனபால் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.