திருச்சி,செப்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்திருப்பதாவது: கடந்த 2006 ஆம் ஆண்டு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச் சாலை அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கும் போது திருச்சி பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை 4 வழிச்சாலை திட்டத்தி ற்கு புறம்பாக சர்வீஸ் சாலை அமைக்காமல் 4 வழி அதிவேக சுங்க கட்டண சாலை அமைத்தார்கள். இந்தச் சாலை பெல், துப் பாக்கி தொழிற்சாலை, எச்ஏ பிபி, பொன்மலை ரயில்வே பணிமனை, என்.ஐ.டி என பல்வேறு அரசு தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என கல்வி நிலையங்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் சாலையா கும். மேலும் நூற்றுகணக் கான தெருச் சாலைகளும், பல இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளும் நேரி டையாக இந்த அதிவேகச் சாலையில் இணையும் நிலையில் இருப்பதால் கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 1500 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆயி ரக்கணக்கானவர்கள் கை, கால்களை இழந்து நிரந்தர ஊனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சர்வீஸ் சாலை மீட்பு குழு வை அமைத்து பல கட்ட போ ராட்டங்களை நடத்தி வந்த னர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தலையீட்டின் பெயரில் ஒன்றிய அரசு தேவையான நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி ஒப்ப டைக்க கோரியது. அதன டிப்படையில் 21-5-2014 தமி ழக அரசு அரசாணை 104 இன் படி 84.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. மேற்படி சாலையோரத்தில் இருந்த கட்டிட உரிமை யாளர்கள் சிலர் உயர் நீதி மன்றம் சென்று தடை யாணை பெற்றனர். தொடர்ந்து நடந்த சட்ட போராட்டத்திற்கு பிறகு 15-10-2019 இல் இறுதி உத்த ரவு பிறப்பிக்கப்பட்டு சிறப்பு மாவட்ட வருவாய் அலு வலரை நியமித்து நிலங்க ளை அளவிடும் பணி துவங்கப்பட்டு 2021 இல் முடிவடைந்தது. நில அள வீடு செய்து 3 ஆண்டுக ளுக்கு பிறகும் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியை செய்யாமல் திட் டத்தை முடக்கி வைத்தி ருப்பது கண்டனத்திற்கு ரியது. எனவே தமிழக அரசு நிலங்களை கையகப் படுத்தி தேசிய நெடுஞ்சா லைத்துறையிடம் ஒப்ப டைக்க வேண்டும். மனித உயிர்கள் இனியும் விபத்தில் இழக்க அனுமதிக்க கூடாது. சர்வீஸ் சாலை அமைக் கும் வரை சட்டவிரோதமாக அமைத்த மரண சாலைக்கு வாகன வசூல் செய்யக் கூடாது. துவாக்குடி சுங்கச் சாவடியை மூட வேண்டும். சாலையின் அனைத்து கிராசிங்கிலும் சுங்கச்சாவடி அமைக்கும் வரை சிக்னல் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 21 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடை பெறுகிறது. அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் படி அழைக்கின்றோம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.