திருவாரூர், டிச.18 - சமூக ஊடகங்கள் வாயிலாக மத நல்லிணக்கத்தை சீர்குலைக் கும் முயற்சியில் ஈடுபடும் பாஜக வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பரகதாபாத் (அடவங் குடி) கிளைச் செயலாளர் எச்.யாசர் அரஃபாத் தலைமையிலான நிர்வாகிகள், திங்கள்கிழமை திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் அளித்த மனுவில் கூறப் பட்டிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் குடவா சல் வட்டத்தில் உள்ள பரகதாபாத் (அடவங்குடி) பல ஆண்டுகளாக இதே பெயர்களுடன் உள்ளது. இங்கு முஸ்லிம்களும், இந்துக்க ளும் ஒற்றுமையாக வாழ்ந்து வரு கின்றனர். ஊரக வளர்ச்சித் துறை பதி வேட்டின்படி இலையூர் ஊராட்சி யானது, பரகதாபாத், அடவங்குடி, கொண்டையனிருப்பு, இலையூர் ஆகிய 4 பகுதிகளை உள்ளடக்கி யது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் அஞ்சலக கிளையில் இந்த பரகதா பாத் என்ற பெயர் 1950-களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரு கிறது என ஆவணங்களில் உள்ளது. அத்துடன், அங்குள்ள வீடுகளுக் கான மின் இணைப்புகளிலும் பரக தாபாத் என்ற பெயரே உள்ளது. ஆனால் பாஜக மாவட்டச் செயலா ளர் பாஸ்கர், சமூக வலைதளங்க ளில் அவதூறாக பரப்பிய செய்தியை உண்மை என நினைத்து, பரகதாபாத் என்ற ஊர்ப் பெயர் பலகையை நெடுஞ்சாலைத் துறை யினர் எடுத்துவிட்டனர். இது குறித்து கேட்ட போது, நெடுஞ் சாலை விரிவாக்கத்துக்காக எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை விரிவாக் கத்துக்கும் பெயர் பலகை இருந்த இடத்துக்கும் எவ்வித தொ டர்பும் இல்லை.
அந்தத் தெரு பலகை ஓராண் டுக்கு முன்பு வைக்கப்பட்டது. எந்த விசாரணையும் இன்றி நெடுஞ் சாலைத் துறை உடனடியாக எடுத் தது தவறு. நெடுஞ்சாலைத்துறை எடுத்த பரகதாபாத் என்ற பல கையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதே கோரிக்கையை வலி யுறுத்தியும், சமூக நல்லிணக்கத்து டன் வாழ்ந்து வரும் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு செய்த பாஜக திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூத்தா நல்லூர் பகுதியில் இந்து சமூகத் தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு இஸ்லாமியர் போல் வேடமிட்டு, சமூக ஊடகங்களில் பொய் பிரச் சாரத்தில் ஈடுபட்டனர். தற்போது குடவாசல் அருகே உள்ள பரகதாபாத்தில் இஸ்லாமி யர்களும் இந்துக்களும் ஒற்றுமை யுடன் வாழ்ந்து வரும் நிலையில், மதக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளை திட்ட மிட்டு பரப்பி வருகின்றனர் பாஜக வினர். மதநல்லிணக்கத்தை சீர்கு லைக்கும் வகையில் செயல்படும் பாஜகவினர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, சில அரசு அலுவலர்களும் உதவு வதாக தெரிகிறது. எனவே தமிழ்நாடு முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி வேண்டும்” என தெரி வித்துள்ளார்.