districts

img

சிபிஎம் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் இரா.முத்துக்குமார்

திருச்சிராப்பள்ளி, அக்.12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றிய 16 ஆவது  மாநாடு  புதனன்று நடந்தது. மாநாட்டு  கொடியை, விவசாயிகள் சங்க முன்னாள் செயலாளர்  கே.ஆர்.பிச்சைமுத்து ஏற்றி னார். மாநாட்டிற்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அன்ப ழகன், ஜோதி, மங்கள்ராஜ் ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் பாண்டியன் துவக்க வுரை ஆற்றினார். மாநாட்டில் உப்பிலிய புரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் போதிய மருத்து வர்கள், செவிலியர்களை நியமித்து சிடி ஸ்கேன், டயா லிசிஸ் வசதிகளை ஏற்படுத்த  வேண்டும். புளியஞ்சோலை உபரி நீரை வட்டாரம் முழுவ திலும் உள்ள விவசாயிகளின் விவசாயத்திற்கும் குடிநீருக் காகவும் பகிர்ந்தளிக்க வேண்டும். பாலகிருஷ்ணம் பட்டி பேரூராட்சியில் நகர்ப்புற வேலை திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக தளுகை இரா. முத்துக்குமார் உள்பட 11  பேர் கொண்ட ஒன்றியக்  குழு தேர்வு செய்யப்பட்டது. புறநகர் மாவட்டச் செயலா ளர் எம்.ஜெயசீலன் நிறை வுரை ஆற்றினார்.