districts

img

சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது

திருச்சிராப்பள்ளி, டிச.7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட 24 ஆவது பிரதி நிதிகள் மாநாடு சமயபுரம் ஸ்ரீசுந்தரம் மஹாலில் தோழர் சீத்தாராம் யெச்சூரி  நினைவரங்கில் சனிக் கிழமை தொடங்கியது

கடந்த மாநாடு நடை பெற்ற மணப்பாறையில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் பெற்றுக் கொண்டார். மண்ணச்சநல்லூரில் இருந்து மூத்த தோழர் செல்லம்மாள் நினைவாக கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடி மரத்தை மூத்த தோழர் ஜெ. சுப்பிர மணியன் எடுத்துக் கொடுக்க, அதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பி. நல்லுசாமி பெற்றுக் கொண்டார்.

மாநாட்டுக் கொடியை மூத்த தோழர் எல். ரங்க நாதன் ஏற்றினார். மாநாட்டி ற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சிதம்பரம், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஏ.ஜி.குமார், பி.லிங்க ராணி ஆகியோர் தலைமை  வகித்தனர். அஞ்சலி தீர்மா னத்தை மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஆர்.நடராஜன் வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் கே.வி.எஸ். இந்துராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயற் குழு உறுப்பினர் என். குணசேகரன் துவக்க உரை யாற்றினார். வேலை - ஸ்தா பன அறிக்கையை மாவட்டச்  செயலாளர் எம்.ஜெயசீலன் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சிவராஜன் சமர்ப்பித்தார். தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. 

மாநாட்டில் என்.ராம கிருஷ்ணன் எழுதிய “செங்கொடி ஏந்திய பன்முக  வித்தகர் தோழர் கே.வரத ராஜன்” என்ற புத்தகத்தை மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் வெளி யிட, அதனை மாவட்டக் குழு  உறுப்பினர் எஸ்.சம்பத், மாணவர் சங்கத் தலைவர் ஆமோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் மூத்த தோ ழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.வரத ராஜன் மகன் பாஸ்கர் உள்பட அவரது குடும்பத்தி னர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.