திருச்சிராப்பள்ளி, டிச.6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட 24 ஆவது மாநாடு டிசம்பர் 6, 7, 8 ஆகிய தேதி களில் நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை (டிச.6) மாலை செம்படை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சமயபுரம் பழைய பேருந்து நிலையத் திலிருந்து பேரணியை மூத்த தோழர் எம்.கே.தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். சமயபுரம் நால் ரோடு பகுதியில் தோழர் சங்கரய்யா நினைவுத்திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு புறநகர் மாவட்டச் செயலா ளர் எம்.ஜெயசீலன் தலைமை வகித்தார்.
மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். சம்பத் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.சின்னதுரை, வீ. அமிர்தலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் எ.கனகராஜ் வரவேடற றார். ஒன்றியச் செயலாளர் ஆர்.பால கிருஷ்ணன் நன்றி கூறினார்.
பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இன்று பிரதிநிதிகள் மாநாடு
மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (டிச.7) பிரதிநிதிகள் மாநாடு தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடைபெறுகிறது.
மாநாட்டு கொடியை மூத்த தோழர் எல்.ரங்கநாதன் ஏற்றுகிறார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். நடராஜன் வாசிக் கிறார். வரவேற்பு குழு தலைவர் கே.வி.எஸ்.இந்திராஜ் வரவேற்புரை ஆற்றுகிறார். மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் துவக்க வுரை ஆற்றுகிறார். புறநகர் மாவட்டச் செயலாளர் எம். ஜெயசீலன் வேலை அறிக்கையை வாசிக்கிறார். வரவு - செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சிவராஜன் சமர்ப்பிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மூத்த தோ ழர் கே.வரதராஜன் வாழ்வும், பணியும் புத்தகம் வெளியிடப்படுகிறது. பின்னர் மூத்த தோழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மூன்றாம் நாளான ஞாயிற்றுக் கிழமை (டிச.8) நடைபெறும் பிரதிநிதி கள் மாநாட்டில் மாநிலக் குழு உறுப்பி னர் வி. அமிர்தலிங்கம் வாழ்த்துரை ஆற்றுகிறார். சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக் குழு உறுப்பினருமான எம். சின்னதுரை நிறைவுரையாற்றுகிறார். வரவேற்புக் குழு செயலாளர் ஏ.கனகராஜ் நன்றி கூறுகிறார்.