districts

img

சிபிஎம் திருவாரூர் ஒன்றியச் செயலாளராக பி.ஆர்.எஸ். சுந்தரய்யா தேர்வு

திருவாரூர், நவ.11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய  24 ஆவது மாநாடு புலி வலம் கணேஷ் திருமண  மண்டபத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு வி.ராஜாங் கம், எஸ்.திரிபுரா ஆகியோர்  தலைமை வகித்தனர். முன்ன தாக திருவாரூர் காட்டாற்று பாலத்தில் இருந்து பேரணி யாக புறப்பட்டு, மாநாட்டு கோரிக்கைகளை முழக்க மிட்டவாறு மாநாட்டு அரங்கத் திற்கு வந்தடைந்தனர். மாநாட்டு செங்கொ டியை மூத்த தோழர் பி. மாதவன் ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா. கோமதி வாழ்த்துரை ஆற்றி னார். மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் நிறை வுரையாற்றினார். 13 ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டு  புதிய ஒன்றியச் செயலாள ராக பி.ஆர்.எஸ்.சுந்தரய்யா தேர்வு செய்யப்பட்டார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சிப்காட் தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் தொகை செலுத்திய அனைத்து விவ சாயிகளுக்கும் விடுபடா மல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.