districts

img

சிபிஎம் திருவாரூர் மாவட்ட மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு

திருவாரூர், அக்.23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்ட 24 ஆவது மாவட்ட மாநாடு  நன்னிலம் ஒன்றியம் கொல்லூமாங்குடியில் டிசம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் நடை பெறுகிறது. இதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் செவ்வாயன்று பேரளத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர் ஜெ.முகமது உதுமான் வரவேற்றார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் விளக்கி உரையாற்றினார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக ஐ. முகமது உதுமான், செயலாளராக தியாகு ரஜினிகாந்த், பொருளாளராக எம். ராமமூர்த்தி, துணைத் தலைவராக கே.எம். லிங்கம், துணைச் செயலாளராக ஜி.செல்வம் ஆகியோர் அடங்கிய 100 பேர் வரவேற்பு குழு  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வர வேற்பு குழு நிர்வாகிகளை அறிவித்து நிறை வுரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.எம்.லிங்கம் நன்றி கூறினார். கூட்டத்தில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், வர்க்க வெகு ஜன அரங்கத்தின் தலைவர்கள், நிர்வாகி கள் உரையாற்றினர்.