districts

திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது

செம்பனார்கோவிலில் போலீஸ் தாக்குதல்

செம்பனார்கோவிலில் ஸ்டேட் பாங்க் வங்கியை மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் செய்தனர்.  செம்பனார்கோவில் காவல் நிலைய  சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோ வன் திடீரென நடத்திய தாக்குதலில் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ் ஆகி யோர் காயமடைந்து மருத்துவமனை யில சிகிச்சை பெற்றனர்.

தஞ்சாவூர், செப்.7- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத,  தொழிலாளர்கள்-விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறி யலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர் களை காவல்துறையினர் கைது செய்தனர்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப் பூண்டியில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் பெ.சண்முகம் தலைமையில் ரயில் மறி யல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள் கே.தமிழ்மணி, சி.ஜோதிபாசு, கே.என்.முருகானந்தம், ஒன்றியச் செயலாளர் டிவி.காரல்மார்க்ஸ்,  நகர் செயலாளர் கோபு உட்பட ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருவாரூர் ஒன்றியம், திருவாருர் நகர்,  கொரடாச்சேரி ஒன்றியம் பகுதிகளிலி ருந்து திரண்டு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் எர்ணாகுளம்- காரைக் கால் ரயிலை சிங்களாஞ்சேரியில் மறித்த னர். மறியலில் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.ஜி.ரகுராமன், பி.கோமதி, ஒன்றி யச் செயலாளர்கள் (திருவாரூர்) என். இடும்பையன், நகர் செயலாளர் எம்.தர்ம லிங்கம் (கொரடாச்சேரி) உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். குடவாசலில் நடைபெற்ற ரயில் மறிய லுக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். கலைமணி, நகர் செயலாளர் டி.ஜி.சேகர், தெற்குப் பகுதி ஒன்றியச் செயலாளர் எம். கோபிநாத் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பேரளம் தபால் நிலைய முன்பு நடை பெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றியச் செயலா ளர் கே.எம்.லிங்கம், நகர் செயலாளர் சீனி. ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.

வலங்கைமான் தபால் நிலையம் முன்பு  நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், ஒன்றி யச் செயலாளர் என்.இராதா உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். குடவாசல் வடக்கு- எரவாஞ்சேரி பகு திக்குழுக்கள் சார்பாகத் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில் மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், ஒன்றி யச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்றனர்.  மன்னார்குடி தலைமை அஞ்சலகம் அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் தலைமையில் மறியல் நடை பெற்றது.  நீடாமங்கலம் அஞ்சலகம் அருகில் நடை பெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்.பி.கந்தசாமி ஒன்றியச் செயலா ளர் டி.ஜான்கென்னடி உட்பட பலர் பங்கேற்றனர். கோட்டூர் அஞ்சல் அலுவலகம் அருகே  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.என். முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற மறியலில் நடைபெற்றது. ஒன்றிய செய லாளர் எல்.சண்முகவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நடைபெற்ற ரயில் மறிய லில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், மாநகர் செய லாளர் எம்.வடிவேலன் உட்பட 300-க்கும்  பங்கேற்றனர். 128 பேர் கைது செய்யப்பட்டனர். ஆலக்குடி ரயில் நிலையத்தில் ஒன்றியச்  செயலாளர் கே.அபிமன்னன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். பேராவூரணி அஞ்சல் நிலையம் முன்பு  நடைபெற்ற மறியலில் மூத்த தோழர் வீ. கருப்பையா. மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலா ளர்கள் (பொ) ஆர்.எஸ்.வேலுச்சாமி (சேது பாவாசத்திரம்), வே.ரெங்கசாமி (பேரா வூரணி), கண் பார்வையற்ற மாற்றுத் திற னாளி ஆர்.விஜயகுமார் உட்பட நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  பட்டுக்கோட்டை தபால் நிலையம் முன்பு  மறியல் செய்த மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், ஒன்றியச் செய லாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்ட 70 பேர் கைது  செய்யப்பட்டனர். திருவோணம் ஊரணிபுரம் தபால் நிலை யம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், நகர்  செயலாளர் பாலசந்தர் உள்ளிட்ட 30- பேர்  கைது செய்யப்பட்டனர். மதுக்கூர் அஞ்சல் நிலையம் முன்பு மறிய லில் ஈடுபட்ட மூத்த தோழர் ஆர்.சி.பழனி வேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் (பொ) ஆர்.காசிநாதன் உட்பட 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரத்தநாடு: அஞ்சல் அலுவலகம் எதிரே  நடைபெற்ற போராட்டம் நடத்திய மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் உள்ளிட்ட 32 பேர் கைது  செய்யப்பட்டனர்.  அம்மாபேட்டை தபால் நிலையம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றி யச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன் உள்ளிட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர். திருவையாறு பாரத ஸ்டேட் வங்கி முன்பு  மறியலில் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, உறுப்பினர் கே.பக்கிரிசாமி உள்ளிட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர். பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில், திருக்காட்டுப்பள்ளி தபால் நிலையம் முன்பு  நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட ஒன்றியச் செயலாளர் ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பி னர் வெ.ஜீவகுமார் உட்பட 45 பேர் கலந்து கொண்டனர் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணத்தில் தள்ளுமுள்ளு

கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்டச்  செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை யில் மறியல் நடைபெற்றது. மாநகர் செயலா ளர் நாகராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணத்திற்கு வந்த ரயிலை காலை 8.50 மணிக்கு மறிக்கப்பட்டது. ஒன்றிய அர சைக்கண்டித்து விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பத்து நிமிடம் ரயில் கும்பகோணத்தில் நிறுத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாய மாக காவல்துறை கைது செய்தது. அப் பாது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருவிடைமருதூர் தபால் அலுவலக முன்பு மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவ பாரதி தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்டக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாச்சியார்கோவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மறியலில் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், ஒன்றி யச் செயலாளர் பழனிவேல் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர். பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு  ஒன்றியச் செயலாளர் முரளிதரன் தலைமை யில் பிரச்சாரம் நடைபெற்றது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஒன்றியம், நகர், குத்தா லம் ஒன்றிப் பகுதிகளிலிருந்து திரண்டு வந்தி ருந்த கட்சியினர் மாப்படுகையில் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலை மையில் சென்னையிலிருந்து திருச்சிராப் பள்ளி நோக்கிச் சென்ற சோழன் விரைவு ரயிலை மறித்தனர். சுமார் 30 நிமிடங்கள் மறியல் நீடித்தது.  சீர்காழி தபால் நிலையம் முன்பு நடை பெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலைமையில் மறி யல் நடைபெற்றது. மறியலில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் நகர், நாகை தெற்கு, நாகை வடக்கு ஒன்றியங்களிலிருந்து திரண்டு வந்தவர்கள் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பி னருமான நாகைமாலி தலைமையில் எர்ணா குளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். அவர்  கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கீழ்வேளூர் இந்தியன் வங்கியை முற்று கையிட்ட மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எம். அபுபக்கர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வலிவலம், கீழையூர், திருப்பூண்டி: வலி வலம் அஞ்சலகத்தை மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் எம். முருகையன், கீழையூர் அஞ்சலகத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன், திருப்பூண்டி அஞ்சலகத்தை மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஏராளமானோர் முற்று கையிட்டனர். வேதாரண்யம்-கரியாபட்டினம்: வேதா ரண்யம் பாரத ஸ்டேட் வங்கியை மாவட்டச்  செயற்குழு வி.அம்பிகாபதி, கரியாபட்டி னம் கனரா வங்கியை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்ரமணியன் தலை மையில் ஏராளமானோர் முற்றுகையிட்டனர். தலைஞாயிறு ஒன்றியத்தில் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் டி. லதா, திருமரு கல் ஒன்றியத்தில் ஏ,வேணு தலைமையில் ஏராளமானோர் முற்றுகையிட்டனர்.  நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 4,350 பேர் மறியலில் ஈடுபட்டனர்.