districts

img

ஒன்றிய அரசைக் கண்டித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

தஞ்சாவூர், நவ.18 -  ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. ஒரேநாடு ஒரே தேர்தல் என்ப தைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை யை குறைத்திட வேண்டும். நாடு  முழுவதும் நடைபெற்று வரும் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அர சுத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்குவதை கைவிட வேண்டும். குற்றவியல் தொழிலாளர் சட்டங்க ளை திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் தெருமுனை பிரசாரக் கூட்டம்  நடைபெற்றது. இதில், ஒன்றியச் செயலாளர் வி.ரவி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  பூதலூர் தெற்கு ஒன்றி யக்குழு சார்பில், பூதலூர் நான்கு ரோட்டில் நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசினார்.  சேதுபாவாசத்திரம் ஒன்றி யக்குழு சார்பில், சேதுபாவா சத்திரம், ரெண்டாம்புளிக்காடு ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப் பட்டன. ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.மேனகா, பி.பெரியண்ணன் தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், ஒன்றியச் செயலாளர் வி. ஆர்.கே.செந்தில்குமார், நிர்வாகி கள் வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  மதுக்கூர் ஒன்றியக்குழு சார்பில், பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி. பழனி வேலு, மூத்த தோழர் ஆர்.காசி நாதன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  இந்த ஆர்ப்பாட்டங்களில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி யினர் திரளாகக் கலந்து கொண்ட னர்.