தஞ்சாவூர், ஜூன் 22-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்களுக்கான சிறப்பு பேரவைக் கூட்டம் தஞ்சாவூர் நான்சி மகாலில் நடைபெற்றது.
முதல் அமர்விற்கு, மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். ‘‘தொழிற்சங்க ஆவணம்’’ என்ற தலைப்பில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் பேசினார்.
இரண்டாவது அமர் வுக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி தலைமை வகித்தார். அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், ‘‘திராவிட இயக்க வர லாறு’’ என்ற தலைப்பில் பேசினார்.
மூன்றாவது அமர்வுக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச் செல்வி தலைமை வகித் தார். மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி, மத்தியக் குழு, மாநிலக்குழு முடிவு களையும், மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டி யன் மாவட்டக்குழு முடிவு களையும் விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலா ளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.