திருச்சிராப்பள்ளி, ஜூலை 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் வாழ்க்கை நிகழ்வுகள், நினைவுகள், சுய சரிதை குறித்த ‘தொடர் ஓட்டம்’ புத்தக அறி முக கூட்டம் மற்றும் நூல் ஆசிரியர் மயிலை.பாலுவிற்கு பாராட்டு விழா திருச் சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலக் குழு உறுப் பினர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி வாழ்த்துரையில் பேசியதாவது:
மூத்த தலைவர் ரங்கராஜன் தனியார் ஆலையில் பணியாற்றும் போது தொழி லாளர்களின் கஷ்டங்களை புரிந்து கொண் டதன் மூலம் சமூக உணர்வு கொண்டு கம்யூனிஸ்டாக மாறியவர். இளமை காலம் முதலே தலைமை பண்பும், போராட்ட குணமும் கொண்டிருந்தார். நமது நிதியை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக குறிப் பிட்டுள்ளார். பெண்கள் இட ஒதுக்கீடு மசோ தாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எம்.பி.யாக, தனி ஒருவராக வாக் கெடுப்பு நடத்த வைத்தவர். ஒரு துணிச்ச லான செயலை செங்கொடி இயக்கம்தான் செய்ய முடியும். இந்த புத்தகம் போராட்ட குணத்தோடு, மார்க்சிய நூலாகவும் நம்முன் உள்ளது” என்றார்.
நூல் ஆசிரியர் மயிலை.பாலு பேசு கையில், “இந்த புத்தகத்திற்காக சுமார் 100 மணி நேரம் பேசியுள்ளார். மார்க்சிய தத்துவத்தை கற்றுக் கொடுத்த கருப்பன், பழனியப்பன் ஆகியோரை இன்றும் மற வாமல் எனக்கு அறிமுகப்படுத்தினார். நாம் தொடங்குவதில் பிரச்சனை உள்ளது. எனவே இளைஞர்களிடம் இருந்து துவங்க வேண்டும். சுய சிந்தனைகளில் இருந்துதான் மனிதர்கள் உருவாக வேண்டும் என்பதற்கு டி.கே.ஆர் ஓர் உதா ரணம். ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு தொடர்பை ஏற்படுத்தி கொண்டு நமது இயக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை டி.கே.ஆரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத் தையும் நுணுக்கமாக கூறக் கூடியவர். இது டி.கே.ஆரின் வாழ்க்கை வரலாறு அல்ல. தமிழ்நாட்டின், இந்தியாவின், சமூக அறிவியல், பொருளாதார வரலாறு” என்றார்.
மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தனது ஏற்புரையில் பேசுகையில், “நிலப் பிரபுத்துவம், முதலாளித்துவத்தை ஒழிக் காமல் சாதியை ஒழிக்க முடியாது. வர்க்க போராட்டம், மிகப்பெரிய புரட்சி இல்லா மல் இது சாத்தியமில்லை. உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்பது முத லாளித்துவத்தின் அடுத்த கட்டம். முதலா ளித்துவம், நிலப் பிரபுத்துவம் ஆகியவை அண்ணன், தம்பிகள். இன்றைய தலை முறைக்கு சென்ற தலைமுறையை விட கூடுதலான பொறுப்பு உள்ளது. மார்க்சி யம் தான் உயிரோட்டம் உள்ள கட்சி. தொழிற் சங்கம் நடத்துவது எளிதல்ல. வர்க்க போராட்டம் நீர்த்துப் போகாமல் பார்க்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் புதிய முறையில் வர்க்க போராட்டத்தை நடத்த வேண்டும். இதில் இளைஞர்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய வேண் டும்” என்றார்.
இதில் கட்சியின் மாவட்டச் செயலா ளர்கள் திருச்சி புறநகர் ஜெயசீலன், கரூர் ஜோதிபாசு, பெரம்பலூர் ரமேஷ், அரிய லூர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா வரவேற்றார். மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது நன்றி கூறி னார்.