திருநெல்வேலி, நவ.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் பி.தியாகராஜன்(77) உடல்நலக் குறைவால் காலமானார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட, மாநில நிர்வாகியாக நீண்ட காலம் செயல் பட்டவர் தோழர் பி.தியாகராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அம்பை தாலுகா செயலாள ராக, சில காலம் நெல்லை மாநகரச் செயலாளராக செயல்பட்டவர். மின்வாரிய பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவராக செயல்பட்டு, அந்த அமைப்பை பலமான அமைப்பாக வளர்த் தெடுத்த தலைவர். மாற்றுத் திற னாளிகள் அமைப்பை துவக்கி, அந்த அமைப்பின் செயலாளராக, தலைவராக சில மாதங்கள் முன்பு வரை செயல்பட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னராக 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட தோழர் பி.தியாகரா ஜன் நெல்லை மாமன்ற உறுப்பின ராக திறம்பட செயல்பட்டவர். தியாகராஜ நகர் மக்களின் நன் மதிப்பை பெற்றவர். தோழர் ஏ.நல்லசிவன் ஒரு சமயம் தோழர் தியாகராஜனை பற்றிச் சொல்லும் போது He will be always ready for arguement என்று குறிப்பிட்டார். தோழர் தியாக ராஜன் எந்த நேரமும் செயல் ஊக்கம் உள்ளவர், மாமன்றப் பணி களில் 19, 26, 27 வார்டுகளுக்கான குடிநீர் திட்டத்திற்கு மணல் மாபி யாக்களால் தடை ஏற்பட்ட போது அப்போதைய மேயர் ஏ.எல்.சுப்பிரமணியத்தை களத்திற்கு அழைத்துச் சென்று போராடியவர். தோழரது மறைவு இடதுசாரி, முற்போக்கு இயக்கங்களுக்கு பேரிழப்பு. தோழரின் மறைவுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அஞ்சலி நெல்லையில் மறைந்த தோழர் பி.தியாகராஜன் (77) உடலுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப் பினர் பி.சம்பத், மாநில செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகம்மது, க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், அர்ஜூனன், பி.கற்பகம், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், தென்காசி மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டியன் மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செய லாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், சிபிஐ(எம்எல்) மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமேஷ், சிபிஎம் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடை பெற்றது.