districts

img

சிபிஎம் மூத்த தோழர் பி.முத்தையன் காலமானார்

திருவாரூர்,  ஜூலை 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருவாரூர் மாவட் டம் குடவாசல் ஒன்றியம், நிம்மேலி, களப்பாலிருப்பு, நெம்மேலி கிளையின் மூத்த தோழர் பி.முத்தையன் வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. இவர், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமாக இருந்த  போது சிபிஎம் நன்னிலம் தாலுகாவில் வட்டச் செய லாளராகவும், அவசர கால கட்டத்தில் நடந்த பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கேற்று அப்பகுதி மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தோழராக செயல்பட்ட வர். தோழரின் மறைவு செய்தி  அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநில செயற் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி ஆகியோர் அவரின் இல்லத் திற்கு சென்று அன்னாரது உடலுக்கு மலர் அஞ்சலி  செலுத்தினார். குடவாசல்  வடக்கு ஒன்றியச் செய லாளர் கே.ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றியச் செயலா ளர் எம்.கோபிநாத், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா மற்றும்  ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், நகர உறுப்பினர்கள்  அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.