கும்பகோணம், நவ.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த முதுபெரும் தலைவரும், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் உருவாவதற்கு முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவரும், நெசவாளர்களின் குரலாய் நெசவாளர் சிஐடியு அரங்கத்தின் முன்னோடி தோழருமான ப.கருணாநிதியின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, திருவிடைமருதூர் சிபிஎம் அலுவலகம் பி.ஆர்.நினைவகத்திலும், திருபுவனம் கடைவீதியிலும் வீரவணக்க அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். முன்னதாக செங்கொடியை சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் ஏற்றினார். ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிபிஎம் உறுப்பினர்கள், நெசவாளர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.