திருவாரூர், மார்ச் 4- தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனே கிடங்கில் வைக்க நுகர் பொ ருள் மண்டல மேலாளரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடைமுறைபடுத்ததை கண்டித்து நன்னிலம் ஒன்றி யம் பேரளத்தில் கடைவீதி திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் தலைமை வகித்தார். நன்னிலம் ஒன்றியச் செயலா ளர் கே,எம்.லிங்கம், நகரச் செயலாளர் சீனி.ராஜேந்தி ரன், எரவாஞ்சேரி பகுதி குழு ஒன்றிய செயலாளர் கே. ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீர பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முதல் நிலை மண்டல அலுவலக அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழு, இன்னும் ஒரு வார காலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் அப்புறப் படுத்தப்படும், இதற்காக 116 லாரிகள் உடனே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உறுதி அளித்தனர். இந்நிலையில், மார்ச் 10 அன்று அலுவலர்கள் கூறி யபடி நடைபெறவில்லை என்றால் மீண்டும் மிகப் பெரிய போராட்டம் நடை பெறும் என சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்கா லிகமாக வாபஸ் பெறப் பட்டது.