கரூர், மார்ச் 19 - பாசிச பாஜக அரசை தோற்கடித்து, கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா மாநிலக் குழு முடிவுகள் குறித்து பேசினார். மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கா.கந்தசாமி, பி.ராஜூ, கே.சக்திவேல், சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பன்மடங்கு உயர்த்தியது. விவசாயி களையும், விவசாயத்தையும் அழித்தி டும் விவசாய விரோதச் சட்டங்களை இயற்றியது. ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, பஞ்சு விலை உச்சத்தை அடைந்தது. இதனால் கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் அழிக்கப் பட்டன. கட்டுமானப் பொருட்கள் விலை அதிகரிப்பால் தொழிலா ளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து ஏழை-எளிய மக்கள், விவசாயிகள், தொழிலா ளர்களை கடந்த 10 ஆண்டுகளாக வஞ்சித்து வரும் மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி அதிக வாக்கு களில் வெற்றி பெற, நாம் அனை வரும் பணியாற்றிட வேண்டும். கரூர், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி களில் பாசிச பாஜக அரசை தோற்கடித்து, காங்கிரஸ் , திமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், பெரம்பலூர் தொகுதி திமுக-விற்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.