திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- ஸ்ரீரங்கம் செக் போஸ்ட் பகுதி கொள்ளி டம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீர்த் தேக்க தடுப்பணையில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். புதிதாக கட்டப் பட்டுள்ள தடுப்பணையின் கீழ் உள்ள பெரிய பாறைகள், கற்களை அப்புறப்படுத்தி சிமெண்ட் சாலைகளை அமைக்க வேண்டும். 15 வயது மாணவர் சாம் ரோஷன் உயிரி ழந்த, தடுப்பணைக்கு அருகே 30 அடி ஆழ முள்ள, ஆகாயத் தாமரை சாக்கடை குளத்தை உடனடியாக மூட வேண்டும். அகால மரணம் அடைந்த மாணவரின் குடும்பத் திற்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், நிலத்தடி நீர் முற்றி லும் கழிவு நீராக மாறி, சாக்கடை கழிவு நீரால் சலவைத் தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத, மாவட்ட நிர்வா கத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் ரவுண்டானா அரு கில் வெள்ளியன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பி னர் சந்தானம், அழகிரிபுரம் கிளைச் செய லாளர் முத்து ஆகியோர் பேசினர். பகுதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.