districts

img

பிரணவ் ஜுவல்லரியிடம் மக்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்,26- பிரணவ் ஜூவல்லரி திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு 10க்கும் மேற் பட்ட நகரங்களில் கிளைகளை உருவாக்கி ரூ100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. ஆருத்ரா, நியோமேக்ஸ் என தொடரும் பல ஆயிரம் கோடி நிதி நிறுவன மோசடிகளை கண்டித்தும், பிரணவ் ஜுவல்லரியிடம் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்க உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும், மோசடிக்கு உடந்தையாக செயல்படுவோரை கண்ட றிந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா தலைமை வகித்தார்.  மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்தி கேயன், லெனின், ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். பகுதி செயலாளர்கள் சுரேஷ், ரபீக், விஜயேந்திரன் மற்றும் பிரணவ் ஜூவல் லரியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.