districts

img

குற்றவாளிகளை பாதுகாக்கும் மயிலாடுதுறை சரக காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 10- குற்றவாளிகளை பாது காக்கும்  மயிலாடுதுறை சரக காவல்துறையைக் கண்டி த்து மயிலாடுதுறை கிட் டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் டி. துரைக்கண்ணு தலைமை வகித்தார்.  மாவட்ட செயலா ளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின்,எஸ்.துரை ராஜ், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.விஜய்,சி.மேகநாதன்  ஆகி யோர் கண்டன உரையாற்றி னர்.   பெண்ணை தாக்கி வன் முறையில் ஈடுபட்ட டிவிஎஸ் தாசரதி கம்பெனியில் பணி யாற்றி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் கைது  செய்யாமல் பாதுகாத்து வரும் காவல்துறையை கண்டித்தும் ,நுண்நிதி நிறு வனத்தில் கடன் பெற்ற 40 க்கும் மேற்பட்ட பெண்களி டம் பல லட்ச ரூபாய் ஏமாற்றி சென்ற சத்தியா என்பவர் மீது புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையென்றும், இண்டூஸ் இன் (INDUS IND) வங்கியில் தவணை முறையில் இருசக்கர வாக னம் டிவிஎஸ் எக்எல் மாத தவணையை தவறாமல் செலுத்தி வந்த நபரிடம் பணத்தை வரவு வைக்கா மல் மோசடி செய்த நிறு வனத்தின் மீது புகார் அளித்தும் காவல்துறை யினர் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட் டத்தில் கட்சியின் நகரக்குழு  உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.