districts

img

சாதிய பாகுபாட்டை கடைப்பிடிக்கும் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன.08-  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிடைக் கழி முருகன் கோவிலில் முறைகேடு களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.                       திருவிடைக்கழியிலுள்ள பழமை யான ஸ்ரீபாலசுப்ரமணியன் திருக் கோயிலில் தொடரும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும், சாதிய பாகுபாட்டை கடைப்பிடி க்கும் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், திருவிடைக்கழி ஊராட்சி நிர்வாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஊழலை  கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.சிம்சன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.குணசுந்தரி, அம்மையப்பன்,டி.ஆர்.ராணி, எம். ஐயப்பன் ,ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் தமிழ்வாசகம் ,பரமசிவம், பவுல் சத்தியராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.   அறங்காவலர்- அர்ச்சகரான பாஜக பிரமுகரின் அடாவடி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருவிடைக் கழி முருகன் கோவிலில் பரம்பரை அறங்காவலர் என்ற போர்வை யில் அடாவடித்தனமாக செயல் படும் ஜெயராமன் மற்றும் அந்த கோவிலில் அர்ச்சகராக பணியாற் றும் பாஜக பிரமுகரான திருக்கடை யூரை சேர்ந்த நந்தக்குமார் மற்றும் கோவிலில் பணியாற்றும் குறிப்பிட்ட சில நபர்கள் சாதிய பாகுபாட்டினை கடைப்பிடிப்ப தோடு வெளிப்படையாக தீண்டா மை குறித்து அநாகரீகமாக தொடர்ந்து செயல்பட்டு வரு கின்றனர்.குறிப்பாக திருவிடைக் கழி ஊராட்சியில் தூய்மை பணி யாளராக பணியாற்றும் சீத்தா லெட்சுமி  என்பவர் கோவில் திரு விழாவையொட்டி முருகன் கோவி லில் தூய்மை பணிக்கு வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் கோவிலில் அளிக்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக பந்தியில் அமர்ந்தவரை கோவிலில் பணி யாற்றும் குறிப்பிட்ட நபர்கள் “நீயெல்லாம் பந்தியில உக்காந்து சாப்பிட போறீயா? என சாதிவெறி யோடு திட்டியதோடு அந்த ஏழை  பெண்ணை வெளியேற்றி யுள்ளனர். பூஜைகளில் பாகுபாடு அது குறித்து கோவில் நிர்வா கத்திடம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினரும், திருவிடைக்கழி கிளை செய லாளருமான ஜோதிபாசு புகார் கூறிய போது பரம்பரை அறங்காவ லரான ஜெயராமன் “ ஏன் அவங்கள அப்படி பேசியதில் என்ன தப்பு என  அராஜகமாக கேள்வி எழுப்பி யுள்ளார். தொடர்ந்து பாதிக்கப்ப பெண், பொறையார் காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. முருகன் பக்தரான திருக்கடையூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தயார் செய்து வந்த பிரசாதத்தை தீட்டு என ஒதுக்கி வைத்த  கோவிலில் பணி யாற்றும் அர்ச்சகர் பாஜக பிரமுகர் நந்தக்குமார் என்பவர். ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முடிகயிறு ஒன்றை வலுக்கட்டாயமாக கட்டி  தலா 100 ரூபாய் என நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கில்  வசூ லிக்கின்றனர். பக்தர்களை ஏமாற்றி பண வசூல் செய்வதோடு, வசதி படைத்தவர்கள்,ஏழைகள் என பிரித்து பூஜைகளிலேயே வித்தி யாசத்தை கடைப்பிடிக்கின்றனர்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்தாலும் அந்த துறை அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டில்  வைத்துக்கொண்டு சாதிய பாகுப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் வருவாய் ஈட்டி முறைகேடுகளை மட்டும் செய்து வருகிற திருவிடைக்கழி முருகன் கோவில் நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.